search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளாட்சி அமைப்பு"

    • 70 குடும்பத்தினரின் ஓட்டுரிமையை உள்ளாட்சி அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்று கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
    • அவர்களுக்கு தேவையான அடிப்படை வச திகளை செய்து தர வேண்டும்.

    ராமநாதபுரம்

    மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக்குழு உறுப்பின ரும், மாவட்ட காங்கிரஸ் பொருளாளரும், ராமநாத புரம் நகர்மன்ற 5-வது வார்டு உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் என்ற கோபால் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் நகராட்சி 5, 6-வது வார்டுகளில் அல்லிக்கண்மாய் பகுதியில் 300-க்கும் மேற்பட்டவர் கள் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசித்தனர். அரசு விதிமுறை மற்றும் கோர்ட்டு உத்தரவுப்படி அவர்கள் அங்கிருந்து காலி செய்யப் பட்டு 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டினம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு களுக்கு மாற்றப்பட்டனர்.

    இவர்களுக்கு ஓட்டுரிமை ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரா மநாதபுரம் நகராட்சியில் உள்ளது. ஆனால் இவர்கள் குடியமர்த்தப்பட்டு இருப்பது திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட பட்டினம் காத்தான். இத னால் இவர்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை ராமநாதபுரம் நக ராட்சியால் செய்ய முடியாத நிலை உள்ளது.

    மேலும் ஓட்டுரிமை நகராட்சியில் இருப்பதால் ஊராட்சி நிர்வாகத்தினரும் தேவையான வசதிகளை முழுமையாக நிறைவேற்றி தர முடியவில்லை. எனவே அவர்களது ஓட்டுரிமையை ஊராட்சி பகுதிக்கு மாற்றம் செய்து ஊராட்சி நிர் வாகத்தின் சார்பில் அடிப் படை வசதிகளை செய்து தரவேண்டும்.

    மேலும் அவர்களுக்கு கூடுதல் பஸ் வசதி, குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதி களை செய்துதர வேண்டும். திருவாடானை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம் நடவடிக்கையின் பேரில் இந்த குடியிருப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    எனவே கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுத்து குடிசை மாற்று வாரியத்தில் உள்ள 70 குடும்பத்தினரின் ஓட்டுரிமையை அப்பகுதி யில் உள்ள உள்ளாட்சி அமைப்பிற்கு மாற்றம் செய்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வச திகளை செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
    • கிராம ஊராட்சிகளுக்கு ரூ.424 கோடியும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.270 கோடியும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ. 50 கோடியும் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக அடிப்படை மானியமாக மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது.

    பட்ஜெட்டில் நடப்பு ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள ரூ .5080 கோடியில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு மட்டும் ரூ.752 கோடி விடுவிக்கப்பட்டு இருக்கிறது.

    உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

    கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன.

    கிராம ஊராட்சிகளுக்கு ரூ.424 கோடியும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.270 கோடியும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ. 50 கோடியும் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி, தடையற்ற குடிநீர், மழைநீர் சேகரிப்பு திட்டங்கள், உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

    ஊழியர்களுக்கு நிதி, புதிய கழிவறைகள் கட்டுதல், நூலகங்களை ஏற்படுத்துதல், அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், தெருவிளக்குகள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தலும் இந்த நிதியின் கீழ் நடைபெறும்.

    ×